இன்னிசை பாடிவரும் , இளம் காற்றுக்கு உருவம் இல்லை ,
காற்றலை இல்லை என்றால் , ஒரு பாட்டொலி கேட்பதில்லை,
ஒரு கானம் வருகையில் , உள்ளம் கொள்ளை போகுதே ,
ஆனால் காற்றின் முகவரி , கண்கள் அறிவதில்லையே ,
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் ,
அதை தேடி தேடி தேடும் , மனதும் தொலைகிறதே ,

கண் இல்லை என்றாலோ , நிறம் பார்க்கமுடியாது ,
நிறம் பார்க்கும் உண் கண்ணை , நீ பார்க்க முடியாது ,
குயில் இசை போதுமே , அட குயில் முகம் தேவையா ?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ?
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் , கற்பனை தீர்ந்திவிடும் ,
கண்ணில் தோன்றா காட்சியில்தான் , கற்பனை வளர்ந்துவிடும் ,
அந்த பாடல் போல தேடல் கூட , ஒரு சுகமே

உயிரொன்று இல்லாமல் , உடல் இங்கு நிலையாதே ,
உயிரென்ன பொருள் என்று , அலை பாய்ந்து திரியாதே ,
வாழ்க்கையின் வேர்களோ , மிக ரகசியமானது ,
ரகசியம் காண்பதே , நம் அவசியம் ஆனது ,
தேடல் உள்ள உயிர்களுக்கே , தினமும் பசி இருக்கும் ,
தேடல் என்பது உள்ள வரை , வாழ்வில் ருசியிருக்கும் ,
அந்த பாடல் போல தேடல் கூட , ஒரு சுகமே

Innisai Paadi Varum

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s